திருக்கோயில் அடிமைகளுக்கு வணக்கம்.
முறைகளை சரியாக பின்பற்றுவோம்...
நம் பாரம்பரியம் காப்போம்...
தகவல் தொடர்பில்...
உங்கள் மூர்த்தி
நம் திருக்கோயிலுக்கு வரும் அனைவருக்கும் அறிவிக்கப்பட வேண்டிய செய்தி. எப்போது நம் திருக்கோயிலுக்கு வந்தாலும் முதலில் கோயிலின் அருகிலுள்ள பொட்டலடி மாடன் சந்நிதிக்கு சென்று அவரை வணங்கி விட்டு பின்னரே நம் திருக்கோயிலுக்குள் வந்து தரிசனம் செய்ய வேண்டும்.
இதுவே நம் முறை. காலமாற்றத்தாலும், அவசரத்திலும், பெரும்பான்மை அறியாமையாலும் நேரடியாக கோவிலுக்குள் சென்று விடுகிறீர்கள். இது நம் பாரம்பரியத்தை நாமே அழிப்பதாக அமைகிறது. நீங்களும் அறிந்து கொள்ளுங்கள். நம் சந்ததிக்கும் சொல்லிக் கொடுங்கள்.
முறைகளை சரியாக பின்பற்றுவோம்...
நம் பாரம்பரியம் காப்போம்...
தகவல் தொடர்பில்...
உங்கள் மூர்த்தி
No comments:
Post a Comment