கோயில் பற்றி சில குறிப்புகள்

இக்கோயில் ஆதி அனாதி காலந்தொட்டு பறையன் பாப்பான்குளம் என்று அழைக்கப்படும் கிராமத்தின் தென்புறம் சுமார் 2 கி.மீ தாண்டி, எட்டுபிள்ளைக் கூட்டத்தார் பெண்வழிக்காணி சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. களக்காட்டிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழ்ப்பக்கம் ஒரு கொப்புராத் தோப்பு பாதையின் நடுவில் அமைந்துள்ளது.
இந்தப் பாதையின் கிழக்கு தொடர்பு தெற்கு காருகுறிச்சிக்குப் பின் தடைபட்டு விட்டது. ஆனால் கோயிலிலிருந்து இப்போது சிங்கம்பட்டி, ஏரம்மாள்புரம் வழியாக பாபநாசத்தை அடைந்து அதன் தொடர்ச்சி கீழாம்புர் கிராமத்தை சென்றடைகிறது.
கோயிலில் உண்டியலோ, துவஜஸ்தம்பமோ, உத்ஸவ விக்கிரகங்களோ, பெரிய பிரகாரங்களோ அமையப் பெறவில்லை.
தினமும் இரவு பூஜை கிடையாது. பிரதி வருடம் தை மாதத்தில் 4 அல்லது 5 வெள்ளிக் கிழமைகளில் பகல் பூஜையும், இரவில் அபிசேக பூஜையும் நடு இரவில் பரிகார தேவதைகளுக்கு ரகசிய பூஜையும் நடைபெறும். தை மாதப் பிறப்பு வெள்ளிக் கிழமை வந்தால் அன்றும், மறுதினமும் பொது பூஜை கிடையாது. அடுத்து வரும் வெள்ளிக் கிழமை பொது பூஜை வைக்கப்படும். அப்பொழுது காப்பரிசியும், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காயுடன், பானகமும் நிவேதனம் செய்யப்படுகிறது. காணிக்கையாக கோமுரத்தாரிடம் பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் காணிக்கை காசுகளையும், முழுத் தேங்காயையும் கொடுப்பது வழக்கம்.
சுவாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் இத்திருக்கோவிலை பராமரித்து வருகிறது.

பெண்கள் எந்த வயதினரும் அனுமதி கிடையாது என்பது வழிவழியாக நம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அறிந்ததே. அது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது

தை வெள்ளி மற்றும் நவராத்திரி காலங்களில் அன்னதானம் செலவுகளை சுவாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் ஏற்றுக் கொள்கிறது.

இது தோஷ பரிகார கோவில் கிடையாது. எனவே இங்கு எந்த விதமான பரிகார பூஜைகளும் நடத்த படுவதில்லை. கோவில் அடிமைகள் விரும்பினால் சண்டி ஹோமம் மற்றும் ருத்ர ஹோமம், சாஸ்தா சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை மட்டும் விசேஷ நாட்களில் sponsor செய்து ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

மற்ற சாதாரண நாட்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையில் பகல் பூஜை மட்டும் நடைபெறும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் கோவில் தகவல் தொடர்பு அதிகாரியை தொடர்பு கொண்டு பின் வரவும். மேலும் பூஜை, கோவில் பற்றிய விபரங்களுக்கும் கோவில் தகவல் தொடர்பு அதிகாரியை அணுகவும்.

நமது திருக்கோவில் A/C ற்கு (04800100067814) ஆன்லைன்-ல் பணம் அனுப்பியவர்கள் கண்டிப்பாக பண பரிமாற்ற விபரம் மற்றும் உங்களுடைய விபரம் அனைத்தையும் swamysadaiudayartemple@gmail.com என்ற ஈமெயிலுக்கு தகவல் தெரிவித்தால் ரசீது மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

டிரஸ்ட் A/c-ற்கு (04800100062746) பணம் அனுப்பியவர்கள் கோவில் ட்ரஸ்ட்டி சங்கரராமன் அவர்களை தொடர்பு கொண்டால் உங்களுக்கு ரசீது மற்றும் பிரசாதம் அனுப்பி வைப்பார்.

கோவிலுக்குரிய நேர்ச்சை காணிக்கைகள் மற்றும் பொருள்களையும், கோமுறத்தாருக்கு கொடுக்க வேண்டிய காணிக்கைகளையும் , கோவில் தகவல் தொடர்பு அதிகாரியிடமோ அல்லது நமது கோவில் ட்ரஸ்ட்டியிடமோ மட்டுமே கொடுத்து ரசீது பெற்று கொள்ள வேண்டியது அவசியம். வேறு நபர்களிடம் கொடுக்கும் எந்த பொருளுக்கும் கோவில் நிர்வாகம் அல்லது டிரஸ்ட் பொறுப்பாகாது. மேலும் கோவில் சம்பந்தமான எந்தஒரு அபிவிருத்தி, விசேஷ நாட்களுக்குரிய கட்டளை மற்றும் டொனேஷன் சம்பந்தமாக கோவில் தகவல் தொடர்பு அதிகாரியிடமோ அல்லது நமது கோவில் ட்ரஸ்ட்டியிடமோ மட்டுமே அணுகவும். இந்த தளம் ஒன்று மட்டுமே கோவிலிலிருந்து இயக்கப்படுகிறது. வேறு எந்த தளத்திலிருந்து வரும் செய்திகளுக்கும் கோவில் நிர்வாகம் பொறுப்பாகாது.
நன்றி

Please Contact :
MR.S.MANTHIRA MOORTHI,
Temple Communication Dept.
Cell : 6381 6354 86 (Call/W.App/Msg)

or email to swamysadaiudayartemple@gmail.com
-------------------------------------------------------------
A.SANKARA RAMAN
Temple Trustee
SWAMY SADAIUDAYAR TEMPLE
No.26/160, SADAIUDAYAR SEVA TRUST,
Veerappa puram Street, Kallidaikurichi - 627416.
Tirunelveli
Cell : 96776 44241 (Call / W.A / Msg)
(Time : 9.00 a.m. to 1.00 a.m. - 4 p.m. to 8.30 p.m.)

Sunday, August 11, 2019

நமது சடையுடையார் திருக்கோயில் 2019 - நவராத்திரி திருவிழா

நமது சடையுடையார் திருக்கோயில் 2019 - நவராத்திரி திருவிழா

அருள்மிகு சடையுடையார் சரணம்.


அன்பார்ந்த சடையுடையார் திருக்கோயில் அடிமைகளுக்கு நமஸ்காரம்,
 நமது சடையுடையார் திருக்கோயில் நவராத்திரி திருவிழா வருகிற 29.9.2019 முதல் 8.10.2019 வரை 10 நாட்களும் கொண்டாடப்படுகிறது. அதற்கான பத்திரிகை நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த 10 நாட்களும் பகல் பூஜை மட்டுமே.

           பெண்கள் எந்த வயதினரும் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பது நம் திருக்கோயிலின் வம்சாவழி அடிமைகளாகிய தாங்கள் அறிந்ததே. 
             நவராத்திரி பூஜையை முன்னிட்டு நம் திருக்கோயிலுக்கு காணிக்கை செலுத்த விரும்புபவர்கள் பத்திரிக்கையில் வங்கிக் கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 
             அதில் அனுப்புபவர்களுக்கு திருக்கோயில் டிரஸ்டிலிருந்து ரசீது, பிரசாதங்கள் அனுப்பப்படும்.  வழக்கம்போல் நவராத்திரிக்கான அன்னதானம், விழா ஏற்பாடு முதல் கோயில் துப்புரவு செலவு வரை மற்றும் பத்திரிக்கை அச்சு செலவு மற்றும் தபால் செலவு வரை அனைத்தையும் நமது திருக்கோயிலின் ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் - அடிமைகள் சார்பாக ஏற்றுக் கொண்டுள்ளது. 
             கட்டளைதாரர்கள் தவிர 10 நாட்களிலும் வரும் நட்சத்திரங்களில் எந்நாளில் வேண்டுமானாலும் உங்களுக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.  காணிக்கை உங்கள் விருப்பம் போல் பத்திரிகையில் உள்ள வங்கிக்கணக்கிற்கு அனுப்பி, அதன் விபரங்களையும் உங்கள் முகவரியையும் கண்டிப்பாக திரு.சங்கரராமன், டிரஸ்ட் மேனேஜர் அவர்களுக்கு அனுப்பி வைக்கவும். 
             மற்றபடி நேரில் வந்து பூஜையில் கலந்து கொள்பவர்கள்  அர்ச்சகர்கள் சம்பாவணையை அவர்களிடமே கொடுத்து விடலாம்.

நன்றி.

மேலும் கோவில் மற்றும் விழா பற்றிய தகவல்களுக்கு தொடர்பு கொள்க...

இப்படிக்கு
N.S.M.மூர்த்தி
தகவல் தொடர்பு அதிகாரி
ஸ்வாமி சடையுடையார் திருக்கோயில்.
தெற்கு பாப்பான்குளம், கல்லிடைக்குறிச்சி.
Cell : 6381 6354 86
Email: swamysadaiudayartemple@gmail.com

திருக்கோயில் அடிமைகளுக்கு அறிவிக்கப்பட வேண்டிய செய்தி

திருக்கோயில் அடிமைகளுக்கு வணக்கம்.

நம் திருக்கோயிலுக்கு வரும் அனைவருக்கும் அறிவிக்கப்பட வேண்டிய செய்தி. எப்போது நம் திருக்கோயிலுக்கு வந்தாலும் முதலில் கோயிலின் அருகிலுள்ள பொட்டலடி மாடன் சந்நிதிக்கு சென்று அவரை வணங்கி விட்டு பின்னரே நம் திருக்கோயிலுக்குள் வந்து தரிசனம் செய்ய வேண்டும். 
இதுவே நம் முறை. காலமாற்றத்தாலும், அவசரத்திலும், பெரும்பான்மை அறியாமையாலும் நேரடியாக கோவிலுக்குள் சென்று விடுகிறீர்கள். இது நம் பாரம்பரியத்தை நாமே அழிப்பதாக அமைகிறது. நீங்களும் அறிந்து கொள்ளுங்கள். நம் சந்ததிக்கும் சொல்லிக் கொடுங்கள்.

முறைகளை சரியாக பின்பற்றுவோம்...
நம் பாரம்பரியம் காப்போம்...

தகவல் தொடர்பில்...
உங்கள் மூர்த்தி